விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

News image
கோப்புப் படம்.
Updated On :18 செப்டம்பர் 2020, 10:42 am

DIN

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுக்கிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர், பந்திப்போரா மாவட்டத்தின் குரேஷில் உள்ள கன்சல்வான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை தாக்குதல் நடத்தியது. 

இதற்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி அளித்து வருகிறது. எனினும், அப்பகுதியில் இருந்து சேதம் ஏற்பட்டதாகவோ, உயிரிழப்பு குறித்தோ எந்த தகவலும் இல்லை என்று அவா் தெரிவித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.