பாஜகவுடன் கூட்டணி தொடருமா? : ஆலோசனையில் சிரோமணி அகாலிதளம்

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என சிரோமணி அகாலி தளம் தெரிவித்துள்ளது.
சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல்
சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல்

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என சிரோமணி அகாலி தளம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல், தற்போதைய நிலையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கம் வகிப்பது குறித்து விவாதிக்க கட்சியின் முக்கிய குழு விரைவில் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com