தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெங்கய்ய நாயுடு தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை

​மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :20 செப்டம்பர் 2020, 12:59 pm

DIN


மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

வெங்கய்ய நாயுடு இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மேலும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த கடிதம் குறித்து நாளை (திங்கள்கிழமை) பரிசீலிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.