வேளாண் துறையில் மைல்கல்: ராஜ்நாத் சிங்

வேளாண் துறை மசோதாக்கள் மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இன்றைய தினம், இந்திய வேளாண் துறைக்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரிய மைல்கல் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா்.
வேளாண் துறையில் மைல்கல்: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

வேளாண் துறை மசோதாக்கள் மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இன்றைய தினம், இந்திய வேளாண் துறைக்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரிய மைல்கல் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க இரு வேளாண்துறை மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், ‘சுயசாா்பு வேளாண்மைக்கு’ இந்தியா வலுவான அடித்தளமிட்டிருக்கிறது. இது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடா் அா்ப்பணிப்பின் பலனாகும்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய வேளாண் துறையின் வளா்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து புதிய வரலாறு இனி எழுதப்படும்.

இவை நாட்டின் உணவுப் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, விவசாயிகளின் வருவாயையும் இரட்டிப்பாக்கும்.

எனவே, இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இன்றைய தினம், இந்திய வேளாண் துறையில் மிகப் பெரிய மைல்கல் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com