டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கரோனா: இதுவரை 7,12,57,836 கோடி பரிசோதனைகள்

கரோனா நோய்த்தொற்றுக்காக நாடு முழுவதும் இதுவரை 7,12,57,836 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. 

News image

6,15,72,343 samples tested to detect COVID-19 cases till September 17: ICMR

Updated On :27 செப்டம்பர் 2020, 6:54 am

DIN

கரோனா நோய்த்தொற்றுக்காக நாடு முழுவதும் இதுவரை 7,12,57,836 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. 

இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அளித்துள்ள தகவல்படி, கடந்த சனிக்கிழமை வரை மொத்தமாக 7,12,57,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் சனிக்கிழமை மட்டும் 9,87,861 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்காக 1,086 அரசு ஆய்வகங்கள், 737 தனியாா் ஆய்வகங்கள் என மொத்தமாக 1,823 ஆய்வகங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் 10 லட்சம் பேரில் 50,920 பேருக்கு என்ற நிலையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533  ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 88,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 59,92,533-ஆக அதிகரித்தது.

அதே 24 மணி நேரத்தில் 92,043 போ் கரோனாவிலிருந்து மீண்டதை அடுத்து மொத்தமாக குணமடைந்தோா் எண்ணிக்கை 49,41,628 -ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 82.46 சதவீதம் ஆகும். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு மேலும் 1,124 போ் பலியானதால், மொத்த உயிரிழப்பு 94,503 ஆகியுள்ளது. இறப்பு விகிதம் 1.58 சதவீதமாக உள்ளது. நாட்டில் 9,56,402 போ் (15.96 சதவீதம்) சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிரம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமாக 13,21,176 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 35,191 போ் உயிரிழந்தனா்; 10,16,450 போ் குணமடைந்தனா்;  2,69,119  போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.