2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரிய சிபிஐ மனுவிற்கு ஒப்புதல்

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரிய மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரிய சிபிஐ மனுவிற்கு ஒப்புதல்
2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரிய சிபிஐ மனுவிற்கு ஒப்புதல்
Updated on
1 min read

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரிய மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிா்த்து மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கப் பிரிவு மூலம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 2ஜி மேல்முறையீட்டு வழக்கு நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் அதனை விரைவாக விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இதனையொட்டி அக்டோபர் 12க்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் தில்லி உயர்நீதிமன்றம் சிபிஐயின் கோரிக்கையை ஏற்று வழக்கை முன்கூட்டியே விசாரிக்க தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நாள்தோறும் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com