மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வநத நபர் இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நாளாக மாறியுள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள மற்றும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய இடங்கள் என்று 16 இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஈரோடு மாவட்டமும் அடங்கும்.