மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் ஏர்டெல், ஜியோ

வரும் மாதங்களில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கவரும்

News image
Updated On :5 ஏப்ரல் 2020, 11:32 am



புது தில்லி: வரும் மாதங்களில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என ஆக்ஸிஸ் கேப்பிட்டல் நிறுவனம் கணித்துள்ளது. 

வோடஃபோன் ஐடியா}வின் நிதி நிலைமை மோசமாக இருப்பது இந்த இரு நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் மதிப்பீடுகள் குறித்து ஆக்ஸிஸ் கேப்பிட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

இதுவரை அதிகம் செல்லிடப்பேசி சேவையைப் பயன்படுத்தாதோர் தற்போது அதைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.  இதனால், வரும் மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பல நிறுவனங்கள் தங்களது கட்டண விவரங்களை உயர்த்தி அறிவித்ததும் வருவாய் அதிகரிக்க முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. 

வரும் 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனங்களின் வருவாய்  1 முதல் 6 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் கட்டணங்களை உயர்த்திய நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு குறித்த விவரம் 2020 காலண்டர் ஆண்டில் 9 மாதங்களுக்குப் பிறகே தெரியவரும். தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வருவாய் அதிகரிப்பு விவரம் தெரிய கால தாமதமாகும். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி,  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு பகுதி தொகையைச் செலுத்தி சுமையிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளது. 

தற்போதைய ஊரடங்கு உத்தரவால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் இதர தொழில் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என எதிர்நோக்கி இருக்கும்.  இந்நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனமும் அரசின் சலுகையை எதிர்நோக்கியுள்ளது.   வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகவுள்ளதால்,  ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது என ஆக்ஸிஸ்  கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.