புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் 748 பேரில் 63% பேர் ஆண்கள் என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி மற்றும் மருந்துத் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு இதுவரை 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், மரண விகிதம் 6.01% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரண சம்பவங்களில் ஏப்ரல் 3ம் தேதி மூன்று மரணங்களும், ஏப்ரல் 6ம் தேதி 13 மரணங்களையும் உள்ளடக்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பைதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 458 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. புணேவில் 100 பேருக்கும், தாணேவில் 82 பேருக்கும், சங்லியில் 25 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 16 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உலக அளவில் 12 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. 70 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


