தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா பாதித்தவர்களில் 63% பேர் ஆண்களே: மகாராஷ்டிர அரசு தகவல்

இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2020, 9:38 am

புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் 748 பேரில் 63% பேர் ஆண்கள் என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி மற்றும் மருந்துத் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு இதுவரை 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், மரண விகிதம் 6.01% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரண சம்பவங்களில் ஏப்ரல் 3ம் தேதி மூன்று மரணங்களும், ஏப்ரல் 6ம் தேதி 13 மரணங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பைதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 458 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. புணேவில் 100 பேருக்கும், தாணேவில் 82 பேருக்கும், சங்லியில் 25 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 16 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உலக அளவில் 12 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. 70 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.