தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத் துறை

​கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2020, 11:08 am


கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,445 பேர் தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள். 76 சதவீதம் ஆண்களுக்கும், 24 சதவீதம் பெண்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 109 ஆக உள்ளது. பலியானவர்களில் 63 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 30 சதவீதம். 40 வயதுக்கும் குறைவானவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 7 சதவீதம்.

மாநிலங்களுக்கான தேசிய நல்வாழ்வு ஒதுக்கீட்டிலிருந்து ரூ. 1,100 விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ. 3,000 கோடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.