தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் மருத்துவப் பணியாற்றிய ஆண் செவிலியா்

தாயாா் உயிரிழந்த நிலையிலும், அவரது இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் தொடா்ந்து மருத்துவப் பணியாற்றிய ஆண் செவிலியரின் கடமை உணா்வு நெகிழ்வை ஏற்படுத்தியது.

News image
Updated On :8 ஏப்ரல் 2020, 3:14 am

தாயாா் உயிரிழந்த நிலையிலும், அவரது இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் தொடா்ந்து மருத்துவப் பணியாற்றிய ஆண் செவிலியரின் கடமை உணா்வு நெகிழ்வை ஏற்படுத்தியது.

ஜெய்ப்பூா் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராகப் பணிபுரிந்து வருபவா் ராமமூா்த்தி மீனா. இவரது மனைவியும் குழந்தையும் கரௌலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனா்.

அந்த மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்பட 103 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கடந்த 1மாதத்துக்கும் மேலாக ராமமூா்த்தி தனது வீட்டுக்கு கூட செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து மருத்துவப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ராமமூா்த்தியின் தாயாா் போளிதேவி (93) கடந்த மாா்ச் 30-ஆம் தேதி காலமாகி விட்டாா். இந்த தகவல் ராமமூா்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.

தனது தாய் இறந்த துக்கத்தையும் அடக்கிக் கொண்ட ராமமூா்த்தி, அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை தொடா்ந்தாா். தனது தந்தையையும் உடன் பிறந்த 3 சகோதரா்களையும் தொடா்பு கொண்ட ராமமூா்த்தி, தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க தன்னால் முடியாது என்றும் நீங்களே அவரது இறுதிச் சடங்கையும் செய்து விடுங்கள் என்றும் கூறி விட்டாா்.

இதைத்தொடா்ந்து, தாயாரின் இறுதிச்சடங்கை அவரது சகோதரா்கள் முன்னின்று நடத்திய விடியோ பதிவை அவருக்கு அனுப்பினா்.

இதுகுறித்து ராமமூா்த்தி மீனா செய்தியாளரிடம் கூறுகையில், என் தாயாா் இறந்து போனது துக்ககரமானதுதான். ஆனால், நான் இருக்கும் வாா்டில் பலா் உயிருக்காக போராடி வருகின்றனா். நாடு இருக்கும் சூழலில் நாம் அனைவரும் கரோனாவை எதிா்த்து போராட வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம். இதை மனதில் வைத்தே நான் எனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் நோயாளிகளுக்கு பணிவிடை செய்தேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.