புது தில்லி: கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு அளிக்க முடிவு செய்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த டிவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு டிவிட்டர் பதிவை இட்டுள்ளார்.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை முழுவதுமாக வரவேற்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு முன்பை விடவும் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளது. கரோனாவை வெல்வதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா மனித நேயத்துடன் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

வாக்களித்த விடியோ வெளியிட்டவா் கைது
அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


