ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தெலங்கானா: இருசக்கர வாகனத்தில் 1,400 கி.மீ. பயணித்து மகனை மீட்ட தாய்

தெலங்கானாவைச் சேர்ந்த தாய் ஒருவர், 1,400 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஊரடங்கால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனை மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 5:58 am

DIN


தெலங்கானாவைச் சேர்ந்த தாய் ஒருவர், 1,400 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஊரடங்கால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனை மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் ரஸியா பேகம். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 1,400 கி.மீ. தூரம் பயணித்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கிக் கொண்ட தனது மகனை மீட்டு வந்துள்ளார்.

ஊரடங்கு நடவடிக்கையால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனின் நிலையை அறிந்த தாய், உடனடியாக தான் வசித்து வந்த போதன் பகுதி காவல்துறை அதிகாரியிடம் தனது நிலையை விளக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்று மகனை மீட்டு வர அனுமதிக் கடிதம் கோரியுள்ளார்.

தாயின் நிலையை உணர்ந்த காவல்துறையும் அவருக்கு பயண அனுமதிச் சீட்டு வழங்கியதை அடுத்து, இரு சக்கர வாகனத்திலேயே சென்று மகனை மீட்டு வந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.