தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கேரளத்தில் கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது

கேரள மாநிலத்தில கரோனா பாதித்த கர்ப்பிணி அறுவை சிகிச்சை மூலம் இன்று ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 1:08 pm


கன்னூர்: கேரள மாநிலத்தில கரோனா பாதித்த கர்ப்பிணி அறுவை சிகிச்சை மூலம் இன்று ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

காசர்கோடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பரியராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மருத்துவக் குழுவினர் தற்காப்பு உடைகளை அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிரசவம் பார்த்தனர். குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் முதல் முறையாக கரோனா பாதித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. குழந்தையின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு தாயிடம் இருந்து குழந்தை தனித்து வைக்கப்படும். பிறகுதான் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கேரளத்தில் தற்போது 364 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 238 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 130 பேர் காசர்கோடு பகுதியையும், 38 பேர் கன்னூர் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.