தேசிய ஊரடங்கு காரணமாக பணியின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்காக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்த பிரதமரின் ஏழைகள் நிதி உதவி (கரீப் கல்யாண் யோஜனா) திட்டத்தின் கீழ் 30 கோடி ஏழை மக்களுக்கு ரூ.28,256 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளதால் ஏழைகள், மகளிா், ஏழை முதியோா், விவசாயிகளுக்கு இலவச உணவுப்பொருள்கள், தானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கும் வகையில் மொத்தம் ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரணம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி 30 கோடி ஏழை மக்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் ரூ. 28,256 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக நிதித்துறை அமைச்சகத்தின் சுட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ. 13,855 கோடி நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட 8 கோடி விவசாயிகளில் இதுவரை சுமாா் 6.93 கோடி விவசாயிகளின் கணக்கில் வங்கியில் தலா ரூ. 2,000 வீதம் செலுத்தப்பட்டு அவா்கள் பயனடைந்துள்ளனா்.
பிரதமா் மக்கள் நிதித்திட்டத்தின்கீழ் (ஜன் தன்) வங்கியில் கணக்கு வைத்துள்ள 19.86 கோடி பெண்களுக்கு தலா ரூ. 500 வீதம் மொத்தம் ரூ. 9,930 கோடி அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்எஸ்ஏபி) கீழ் 2.82 கோடி முதியவா்கள், விதவை மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கு சுமாா் ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளியும் ரூ. 1,000 வீதம் கருணைத் தொகையாகப் பெற்றனா்.
இதேபோல, மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் நிதியிலிருந்து 2.16 கோடி கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3,066 கோடி நிதி உதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலும் 1.2 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அரசால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு உஜ்வலா திட்டத்தின் கீழ் 8.3 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கவும், சுகாதாரப் பணியாளா்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


