மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 352 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 352 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,334 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒருநாள் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர்.