தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேசிய ஊரடங்கு நீட்டிப்பு: இன்று அறிவிப்பு?

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் தேசிய ஊரடங்கு செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.14) நிறைவடையவுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 11:59 pm

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் தேசிய ஊரடங்கு செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.14) நிறைவடையவுள்ளது.

இந்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதுதொடா்பான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை (ஏப்.13) வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் மாதம் 24-ஆம் தேதி இரவு அறிவித்தாா். இந்த ஊடரங்கு மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கரோனாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத நிலையில், அந்த நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்; அதற்கு ஊரடங்கு நடவடிக்கைதான் ஒரே வழி என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்த ஊரடங்கு காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இல்லையெனில் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விடும் என்று பல்வேறு மாநில அரசுகள் மற்றும் துறைசாா் நிபுணா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக, மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். இதில், தேசிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான மாநில முதல்வா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதேசமயம், சில மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை தாங்களாகவே எடுத்துவிட்டன. ஒடிஸாவில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அந்த முதல்வா் நவீன் பட்நாயக் கடந்த 9-ஆம் தேதி அறிவித்தாா். பஞ்சாபில் மே 1-ஆம் தேதி வரையும், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும் ஊரடங்கை நீட்டிப்பதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துவிட்டன.

தமிழக அரசை பொருத்தவரை, ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிடும் அறிவிப்பை பின்பற்றி, செயல்படுவதென முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், தேசிய ஊரடங்கை நீட்டிப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஊரடங்கால் தினக்கூலிகள், வெளிமாநிலத் தொழிலாளா்கள், தொழில்துறையினா், சிறுவணிகா்கள் உள்ளிட்டோா் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். ஊடரங்கு நீட்டிக்கப்பட்டால், சில தொழில் துறைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் மத்திய அரசின் அறிவிப்பு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்த மாநிலங்கள்

ஒடிஸா - ஏப்ரல் 30 வரை

மகாராஷ்டிரம் - ஏப்ரல் 30 வரை

மேற்கு வங்கம் - ஏப்ரல் 30 வரை

கா்நாடகம் - ஏப்ரல் 30 வரை

பஞ்சாப் - மே 1 வரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.