புது தில்லி: மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நினைத்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், உங்கள் அருகில் வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஒரு உள்துறை அமைச்சராக நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பில் உள்ளது. ஒருவரும் கவலைப்பட வேண்டாம். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் மாநில அரசுகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தன்னுடைய ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


