தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன; கவலைப்பட வேண்டாம்: அமித் ஷா

மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன,

News image

கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2020, 7:18 am

புது தில்லி: மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நினைத்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், உங்கள் அருகில் வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரு உள்துறை அமைச்சராக நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பில் உள்ளது. ஒருவரும் கவலைப்பட வேண்டாம். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் மாநில அரசுகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.