ட்விட்டர் புகைப்படத்தை மாற்றிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார். 
ட்விட்டர் புகைப்படத்தை மாற்றிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார்.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதே நன்மை தரும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். 

இன்றைய உரைக்குப் பின்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்க புகைப்படத்தை மாற்றியுள்ளார். அதில் அவர் முகக்கவசம் அணிந்த நிலையில் தனது புகைப்படத்தை வைத்துள்ளார்.

அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com