கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொளி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. பிரதமர் மோடியுடன் பல விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால், அவருடன் சண்டையிட இப்போது நேரம் இல்லை. கரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க முதல் ஆயுதமாக இருப்பது பரிசோதனை மட்டுமே.
அதாவது கடந்த 72 நாட்களில் ஒரு மாவட்டத்திற்கு 350 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, கரோனா பரவலைத் தடுக்க பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தற்போது இருக்கும் பரிசோதனை மையங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இல்லை. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டும் தீர்வல்ல. எனவே, பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே இதனைத் தடுக்க முடியும். என்று தெரிவித்தார்.
மேலும், காணொளி வாயிலாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

