தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராகுல் காந்தி

கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 9:44 am

கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொளி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. பிரதமர் மோடியுடன் பல விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால், அவருடன் சண்டையிட இப்போது நேரம் இல்லை. கரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க முதல் ஆயுதமாக இருப்பது பரிசோதனை மட்டுமே.

அதாவது கடந்த 72 நாட்களில் ஒரு மாவட்டத்திற்கு 350 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, கரோனா பரவலைத் தடுக்க பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தற்போது இருக்கும் பரிசோதனை மையங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இல்லை. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டும் தீர்வல்ல. எனவே, பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே இதனைத் தடுக்க முடியும். என்று தெரிவித்தார். 

மேலும், காணொளி வாயிலாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.