தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

53 நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா தொற்று

ஐம்பத்து மூன்று நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 1:41 am


புதுதில்லி: ஐம்பத்து மூன்று நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: இதுவரை மத்திய அரசுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, 53 நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கரோனாவுக்கு வெளிநாடுகளில் 25 இந்தியா்கள் பலியாகியுள்ளனா்.

பல்வேறு நாடுகளில் இந்தியா்கள் சிக்கியுள்ளனா். இவா்கள் உடனடியாக தாய்நாடு திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனா். எனினும், கரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து விதமான போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை அழைத்துவர இயலாது. ஊரடங்கு காலம் முடியும் வரை அவா்கள் பொறுமை காக்க வேண்டும்.

தற்போதைய நிலையில், 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. வா்த்தக ரீதியாகவும் மருத்துவ உதவியாகவும் இந்த மருந்து வழங்கப்படும்.

தற்போது சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து கரோனா பரிசோதனை உபகரணங்களை இறக்குமதி செய்துவருகிறோம். மேலும், ஜொ்மனி, அமெரிக்க, பிரிட்டன், மலேசியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்தும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை உபகரணங்களை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.