தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் பலி, 991 பேருக்கு புதிதாக தொற்று: லாவ் அகர்வால்

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் பலியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2020, 11:29 am


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் பலியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதம் சுமார் 3.3 சதவீதமாக உள்ளது. 45 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 14.4 சதவீதம். 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 10.3 சதவீதம், 60-75 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 33.1 சதவீதம் மற்றும் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களின் இறப்பு விகிதம் 42.2 சதவீதம். 

இதில் 83 சதவீதம் பேருக்கு, வேறு நோய் தொடர்பான பிரச்னைகள் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 1,992 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் சதவீதம் சுமார் 13.85 ஆக உள்ளது. நேற்று முதல் கூடுதலாக 991 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.

23 மாநிலங்களுக்குட்பட்ட 47 மாவட்டங்களில் நம்பிக்கையளிக்கக்கூடிய போக்கு காணப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள மாஹி, கர்நாடகத்தில் உள்ள குடகு ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. மற்ற 45 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

14,378 பேரில் 4,291 பேர் (29.8 சதவீதம்) தில்லி மாநாட்டுக்குத் தொடர்புடையவர்கள். தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரில் 84 சதவீதம் பேர், தில்லியில் மொத்தம் பாதித்தோரில் 63 சதவீதம் பேர், தெலங்கானாவில் மொத்தம் பாதித்தோரில் 79 சதவீதம் பேர், உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் பாதித்தோரில் 59 சதவீதம் பேர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் பாதித்தோரில் 61 சதவீதம் பேர் தில்லி மாநாட்டில் தொடர்புடையவர்கள்." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.