இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கரோனா பாதித்தவர்களனின் எண்ணிக்கை 15,712 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 507 பேர் பலியான நிலையில் 2,231 பேர் பாதிப்பில் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரில் 84 சதவீதம் போ் தப்லீக் ஜமாத் மாநாடு தொடா்பினால் நோய்த்தொற்றுக்கு ஆளானதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரம்
மகாராஷ்டிர - 3,651
தில்லி - 1,893
ம.பி.,- 1,407
தமிழகம் - 1,372
ராஜஸ்தான்-1,351
குஜராத் - 1,376 உ.பி., - 969
தெலுங்கானா - 809
ஆந்திரா-603
கேரளா-400
கர்நாடகா-384
புதுச்சேரி - 7