தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 12:31 pm

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 543 ஆக உள்ளது. 2,546 பேர் (14.75%) குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

தென் கொரியாவில் இருந்து 5 லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் விரைவில் வரவுள்ளன. கரோனா வைரஸ் இரட்டிப்பு விகிதம் ஊரடங்கிற்கு முன் 3.5 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 7.5 நாட்களாக உயர்ந்துள்ளது. பாதிப்பு இரட்டிப்பாக 7.5 நாட்கள் ஆகிறது. இதன் மூலமாக கரோனா பரவல் குறைந்துள்ளது தெரிகிறது. 

அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஒருநாளில் இதுவே அதிக பாதிப்பாகும். 

கேரளம், ஒடிசா, கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கோவாவில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை' என்று தெரிவித்தார். 

மேலும், சுகாதாரத் துறை இணைச் செயலாளர் புன்யா சலிலா கூறுகையில், 'ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.