தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் கரோனா பாதிப்பு: தற்போதைய நிலை என்ன?

தில்லியில் கரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 6:01 am


புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

1397 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 78 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நோயாளிகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 5 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

தில்லியில் நேற்று துரித பரிசோதனை கருவி மூலம் சுமார் 74 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் அனைவருக்குமே தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, 125 குடும்பங்கள் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.