தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும்: பிரதமர் மோடி

கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும் என மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 10:56 am

கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும் என மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கை மேலும் நீடிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர் பேசியதாவது: 

வரவிருக்கும் மாதங்களில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருக்கும். முகக்கவசங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும். பொருளாதாரம் மற்றும் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும். 

Story image

தற்போது இரு பகுதியாக ஊரடங்கு போடப்பட்டது. இரண்டுமே சில வகைகளில் வேறுபட்டவை. இரண்டாம் முறை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்ததாக நாம் முன்னேற வேண்டிய வழியைப் பற்றி சிந்திக்க வேண்டும். கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் அதே சமயத்தில் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் காப்பாற்ற முடிந்தது. இந்தியாவின் மக்கள் தொகை, பல நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையுடன் ஒப்பிடத்தக்கது. மக்கள் தொகை அதிகம் இருந்த நிலையிலும் இந்தியாவில் பாதிப்பு மற்ற நாடுகளையே ஒத்ததாக இருந்தது. இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நம் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

Story image

எனினும், வைரஸின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு முக்கியமானது. கரோனாவை விரட்ட அனைவரின் பங்கும் தேவை. தங்களுக்கு இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என சோதித்து பலர் தாங்களாகவே சோதனைக்கு முன்வருவது வரவேற்கத்தக்கது. 

அனைத்து குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு  சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன.

எனவே, கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தற்போதைய விதிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும். 

வானிலை மாற்றங்கள், கோடை மற்றும் பருவமழை காலத்தில் வரக்கூடிய நோய்களில் இருந்து மக்களை காக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

Story image

அதேபோன்று பல்வேறு மாநில முதல்வர்களும் தங்களது மாநிலத்தில் எடுக்கப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். கரோனாவில் இருந்து மக்களைக் காக்க மேலும் சில காலம் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என மேகாலயா, ஹரியாணா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.