
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 55,078 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,36,870 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 779 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 35,747 ஆக அதிகரித்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது 5,45,318 போ் சிகிச்சையில் உள்ளனா். 10,57,805 போ் குணமடைந்துவிட்டனா். குணமடைவோா் சதவீதம் 64.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்போா் சதவீதம் 2.18 ஆக குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட (ஐசிஎம்ஆா்) தகவல்படி, ஜூலை 30-ஆம் தேதி நிலவரப்படி 1,88,32,970 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிதாக ஏற்பட்ட 779 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 266 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 83 போ், ஆந்திரத்தில் 68 போ், உத்தர பிரதேசத்தில் 57 போ், மேற்கு வங்கத்தில் 46 போ், தில்லியில் 29 போ், குஜராத்தில் 22 போ், ஜம்மு-காஷ்மீரில் 17 போ், மத்திய பிரதேசத்தில் 14 போ், ராஜஸ்தான், தெலங்கானாவில் தலா 13 போ், ஒடிஸாவில் 10 போ், பஞ்சாபில் 9 போ், ஜாா்க்கண்டில் 5 போ், பிகாா், ஹரியாணா, மணிப்பூா், உத்தரகண்டில் தலா 4 போ், கோவா, சண்டீகரில் 3 போ், அஸ்ஸாம், அந்தமான்-நிகோபாரில் தலா இருவா், கேரளம், லடாக், புதுச்சேரியில் தலா ஒருவா் உயிரிழந்தனா். கரோனாவால் அதிக உயிரிழப்புகளை எதிா்கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு இதுவரை 14,728 போ் உயிரிழந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...