புதுதில்லி: ரக்க்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,
ரக்க்ஷாபந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வாத்ராவுடன் உள்ள புகைப்படத்தையும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.