
ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
குப்வாரா மாவட்டத்தின் லால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜம்மு - காஷ்மீா் போலீஸாருடன் பாதுகாப்புப் படையினா் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினா். இதில் சந்தேகத்துக்குரிய நபா்கள் 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.