Enable Javscript for better performance
முகநூலில் சர்ச்சை பதிவு: பெங்களூரு வன்முறையில் 3 பேர் பலி; 110 பேர் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகநூலில் சர்ச்சை பதிவு: பெங்களூரு வன்முறையில் 3 பேர் பலி; 110 பேர் கைது

    By DIN  |   Published On : 12th August 2020 11:17 AM  |   Last Updated : 12th August 2020 11:24 AM  |  அ+அ அ-  |  

    பெங்களூரு வன்முறை

    பெங்களூரு வன்முறை

    பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாஸ் மூர்த்தியின் உறவினர் முகநூலில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவால் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர்.

    கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவின் என்பவர் தனது முகநூல் பக்க பதிவில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. அகண்ட மூர்த்தியின் உறவினரான நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகண்ட மூர்த்தியின் வீடு மீதும் கற்களை வீசினர். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    எனினும், வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததாகவும்,  60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்ட நவீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்தார். 

    144 தடை உத்தரவு: வன்முறையை தொடர்ந்து பெங்களூருவின் டிஜே ஹல்லி மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    110 பேர் கைது: சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய தகவலை பகிர்ந்ததாக தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் தீ வைப்பு, கல் வீசுதல் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் இணை ஆணையர் (குற்றப் பிரிவு) சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp