காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
முன்னதாக, இன்று மாலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து, மாரடைப்பால் அவர் காலமானார்.
இவரது மறைவுக்கு பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.