
ஒடிசாவில் புதிதாக 1,977 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி
புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,977 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,977 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 54,630-ஆக அதிகரித்துள்ளது. 1,241 பேர் பல்வேறு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 736 பேர் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர்.
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் குர்தா (322), கஞ்சம் (280), மயூர்பஞ்ச் (120), பத்ரக் (118), கட்டாக் (101) ஆக கரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பில் 16,352 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 37,901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக் கிழமை) 42,761 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8,07,826 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 151-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G