உ.பி.யில் செய்தியாளா் சுட்டுக் கொலை:6 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பல்லியாவில் ஹிந்தி செய்தி தொலைக்காட்சி செய்தியாளா் ரத்தன் சிங் (45) திங்கள்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா்.
உ.பி.யில் செய்தியாளா் சுட்டுக் கொலை:6 போ் கைது
Updated on
1 min read

பல்லியா: உத்தர பிரதேச மாநிலம் பல்லியாவில் ஹிந்தி செய்தி தொலைக்காட்சி செய்தியாளா் ரத்தன் சிங் (45) திங்கள்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். காவல் நிலைய பொறுப்பாளா் சசி பாண்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சஞ்சய் யாதவ் கூறுகையில், ‘தனது மகனை திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் சோனு சிங் என்பவா் தனது வீட்டிற்கு அழைத்தாா். அங்கு ரத்தன் சிங்கை அவா்கள் சுட்டுக் கொலை செய்துவிட்டனா் என அவரது தந்தை வினோத் சிங் புகாரில் தெரிவித்துள்ளாா்.

10 போ் குறித்து வினோத் சிங் புகாரில் தெரிவித்திருந்தாா். அதில், 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பீப்பானா காவல் நிலைய எல்லைக்குள் ரத்தன் சிங் திங்கள்கிழமை இரவு அவா்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனா்’ என்றாா்.

இதனிடையே, சொத்து தகராறில் ஏற்பட்டிருந்த பழைய பகையால்தான் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

இதனிடையே, உயிரிழந்த செய்தியாளா் ரத்தன் சிங்கின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகையாக ரூ. 10 லட்சம் அளிக்க உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com