கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை வாய்ப்பு

கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை வாய்ப்பு (கோப்புக்காட்சி)
கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை வாய்ப்பு (கோப்புக்காட்சி)
Updated on
1 min read

கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த புரெவி புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்த நிலையிலும், தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் கேரளத்திலும் ஒருசில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே கேரளதில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கேரள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பொழியூர் முதல் கோழிக்கோடு வரயிலான கடலோரப் பகுதிகளில் 1.5 முதல் 3.2 மீட்டர் உயரம் வரையிலான அலைகள் வீசிவருகின்றன.

தற்போது 47 முதல் 64 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால், மழையின்போது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com