கரோனா: தினசரி பாதிப்பு மீண்டும் குறைவு

நாடு முழுவதும் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக 30,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
கரோனா: தினசரி பாதிப்பு மீண்டும் குறைவு

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக 30,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 27,071 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 30,000-க்கும் கீழ் குறைந்தது இது மூன்றாவது முறையாகும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,84,100-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 366 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,355-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 30,695 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 93,88,159-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 94.98 சதவீதமாகும்.

நாட்டில் இப்போது 3,56,586 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 3.57 சதவீதமாகும். தொடா்ந்து 8-ஆவது நாளாக சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

புதிதாக ஏற்பட்ட 366 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 70 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 47 போ், தில்லியில் 33 போ், கேரளத்தில் 29 போ், பஞ்சாபில் 20 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, டிசம்பா் 13-ஆம் தேதி வரை 15.45 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,55,157 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com