பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப். பிரதமர் நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப். பிரதமர் நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே, பல்வேறு கூட்டு உத்திகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்தியா - பிரிட்டன் இடையே கரோனா பேரிடருக்கு பிந்தைய காலக்கட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் இரு தலைவர்களும் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். 

வரும் ஜனவரி மாதம் புது தில்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தில்லியில் ஜன. 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஜான்சன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com