கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மேகௌடா தற்கொலை செய்து கொண்டார்.
சிக்மகளூரு அருகே கடூரில் ரயில் தண்டவாளத்தின் பக்கத்தில் தர்மேகவுடாவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து தர்மேகௌடா கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படும் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தர்மேகௌடா ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.