வருமான வரித் தாக்கல்: ஜனவரி 10 வரை அவகாசம் நீட்டிப்பு

2019-20ம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10 வரை அவகாசம் நீட்டிப்பதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


2019-20ம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10 வரை அவகாசம் நீட்டிப்பதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் தற்போது 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கணக்குளைத் தணிக்கை செய்ய மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com