புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை வரும் ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை இரவுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது மேலும் 7 நாள்களுக்கு அந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. கரோனாவுக்கு முடிவில்லை; கரோனாவே முடிவுமல்ல
அதிதீவிர கரோனா தொற்று பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.