

சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் திருடிய பயத்தில் இளைஞர் உயிரிழந்த ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் வனஸ்தலிபுரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு தனியார் கல்லூரி மாணவர் சதீஷ்(17). இவர் தனது இரண்டு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சாக்லேட்டுகள் வாங்கச் சென்றிருந்தார்.
அப்போது, அவரது நண்பர்கள் கூற, சதீஷ் ஒரு சாக்லேட்டைத் தூக்கி தனது சட்டைப்பையில் வைத்திருந்தார். இதனை ஒரு பாதுகாப்புக் காவலர் கவனித்துவிட்டார்கள். பின்னர் சதீஷ் தனது நண்பர்களுடன் கடையை விட்டு வெளியேறும்போது, பாதுகாப்புக் காவலர் அவரை அழைத்தார். உடனே பயத்தில் சதீஷ் தான் திருடிய சாக்லேட்டை வீசினார். அப்போது திடீரென அவர் காவலர் மீது சரிந்து விழுந்தார்.
உடனடியாக, சதீஷின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். திருடிய பயத்தில் அவருக்கு மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்றும் தெரிவித்தனர்.
ஒரு சாக்லேட் திருடிய விஷயத்தில் சதீஷ் உயிரிழந்தது அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.