செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் சுகுமார் கரோனாவுக்குப் பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சுகுமார்.
இவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 330 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்த கரோனா பாதிப்பு 6,139 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில்தான் அதிக கரோனா நோயாளிகள் உள்ளனர்.