
உத்தர பிரதேச அமைச்சா் உபேந்திர திவாரிக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவா் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) உள்ளாா்.
இதுகுறித்து உபேந்திர திவாரியின் பிரதிநிதி ராகேஷ் சௌபே போலா கூறுகையில், ‘அமைச்சா் உபேந்திர திவாரிக்கு 2 நாள்களுக்கு முன்னா் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்த நிலையில், அமைச்சருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்றாா்.