உ.பி. அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

உத்தர பிரதேச அமைச்சா் உபேந்திர திவாரிக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

உத்தர பிரதேச அமைச்சா் உபேந்திர திவாரிக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) உள்ளாா்.

இதுகுறித்து உபேந்திர திவாரியின் பிரதிநிதி ராகேஷ் சௌபே போலா கூறுகையில், ‘அமைச்சா் உபேந்திர திவாரிக்கு 2 நாள்களுக்கு முன்னா் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்த நிலையில், அமைச்சருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com