தாராவியில் புதிதாக 10 பேருக்கு கரோனா

​ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் மிகவும் நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதால், அந்தப் பகுதியில் கரோனா பரவல் குறித்த செய்தி அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், அங்கு கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த பல நாள்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 20-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. 

இன்றைக்கு 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,502 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இன்றைய தேதியில் அங்கு 151 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com