நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக கரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் வியாழக்கிழமை ஒரு நாளில் நாடு முழுவதும் 3,52,801 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூலை 23-ம் தேதி வரை நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பரிசோதனை 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து, 170 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. மகன்களின் கல்விக்காக வாழ்வாதாரமாக இருந்த மாட்டை விற்று செல்லிடப்பேசி வாங்கிய விவசாயி
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 49,310 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 30,601 -ஆக அதிகரித்துள்ளது.