கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய அரசு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய அரசு


கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுபற்றி மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,804 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,04,107 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.99 சதவீதம். தற்போது மொத்தம் 1,06,737 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 

கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அரசு ஆய்வகங்கள் எண்ணிக்கை 498 ஆகவும், தனியார் ஆய்வகங்கள் எண்ணிக்கை 212 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,39,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 42,42,718 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com