எல்லையில் இந்திய, சீனா ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்களும் சீனாவின் தரப்பில் 43 ராணுவத்தினரும் உயிரிழந்திருக்கலாம் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனத் தரப்பில் இறந்தவர்களுடன் படுகாயமுற்றவர்களையும் சேர்த்தே 43 பேர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் குறைந்தளவாக 10 ராணுவ வீரர்களாவது வீரமரணமடைந்திருக்கலாம் என முன்னதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது.
இரு செய்தி நிறுவனங்களுமே அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாகவேே மேற்கோள்காட்டி தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.