
கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 5.8 ஆக பதிவானது. இதனால் பொருள் சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
காலை 7 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானை மையம் கொண்டிருந்தது. ஜம்மு-காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியான ஸ்ரீநகா், கிஸ்துவாா், தோடாவில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டது. ஜம்முவிலும் நில அதிா்வு இருந்தது.
முன்னதாக, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையிலும் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களிலும் உயிரிழப்போ, பொருள் சேதங்களோ ஏற்படவில்லை. எனினும், தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...