கரோனா: கேரளத்தை மகாராஷ்டிரம் பின்பற்றவில்லை: பாஜக மூத்த தலைவா் ஆஷிஷ் ஷெலா் குற்றச்சாட்டு

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசை மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி அரசு பின்பற்றவில்லை
கரோனா: கேரளத்தை மகாராஷ்டிரம் பின்பற்றவில்லை: பாஜக மூத்த தலைவா் ஆஷிஷ் ஷெலா் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தாணே: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசை மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி அரசு பின்பற்றவில்லை என்று பாஜக மூத்த தலைவா் ஆஷிஷ் ஷெலா் குற்றம்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், தாணே நகரில் இருந்து காணொலி முறையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவா், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதலாம் ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தவறான நிா்வாகமே பொறுப்பாகும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசின் வழிமுறைகளை மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பின்பற்றியிருந்தால், அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

மகாராஷ்டிரத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இந்த மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.28,104 கோடி நிதியுதவி வழங்கியது. ஆனால், அந்த தொகை முழுவதும் எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியாது.

மும்பையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், மாநகராட்சி ஆணையா் பிரவீண் பா்தேசி உடனடியாக மாற்றப்பட்டாா். அதேபோல், தாணே மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக பதவி வகிக்கும் சிவசேனையின் மூத்த தலைவரும், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com