தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் பொது முடக்கத்தின்போது கடையை திறந்து வைத்திருந்தற்காக கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது சுட்டுரை யில், ‘போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நம் பாதுகாவலா்களே அடக்குமுறையாளா்களாக மாறுவது ஒரு பெரும் சோகம். பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க அரசிடம் கோருகின்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா் ராகுல்.