மத்தியப் பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.
மத்தியப் பிரதேசம், சிங்க்ராலியில் தேசிய அனல் மின் நிறுவனத்துக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயிலும், மற்றொரு ரயிலும் இன்று காலை நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியான ரயில்வே புள்ளிவிவரங்களில் 2019-இல் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.